ரணில் செல்லும் பாலத்தில் சர்வதேச நாணய நிதியத்துடன் NPP அரசாங்கமும் முன்னோக்கி செல்லும்..- அனுர.

சர்வதேச நாணய நிதியத்தில் முன்னெடுக்கப்படும் அதே வேலைத்திட்டம் எதிர்வரும் NPP ஆட்சியின் போதும் தொடர வேண்டும் என அக்கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தெரண தொலைக்காட்சி சேனலில் 360 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

‘நாம் ஒரு அரசாங்கத்தைப் பெறும் நேரத்தில் இந்தக் கடன் மறுசீரமைப்பு செயல்முறை நடைபெறவில்லை என்றால், நியாயமான கடன் மறுசீரமைப்பிற்கு நாம் தலையிட வேண்டும்.

அந்த கயிற்று பாலத்தில்தான் சென்றோம் என ரணில் விக்கிரமசிங்க சொன்னால், நாம் இப்போது கயிற்று பாலத்தின் நடுவில் இருக்கிறோம். எனவே இப்படித்தான் நாம் இன்னும் சிறிது தூரம் செல்ல வேண்டும்.

இந்த மறுசீரமைப்பு இல்லாமல் இங்கிருந்து வெளியேற முடியாது’ என்றார் அவர்.

Leave A Reply

Your email address will not be published.