டயானாவுக்கு நாட்டை விட்டு வெளியேற தடை.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் திருமதி டயானா கமகே நாட்டை விட்டு வெளியேறுவதற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கை குடியுரிமை அல்லாத அவர், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராக அமர்வதாக எழுந்த குற்றச்சாட்டில், அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் நேற்று தீர்மானித்தது.

Leave A Reply

Your email address will not be published.