பாடசாலை மாணவியொருவர் சடலமாக மீட்பு.

நானுஓயாவில் பாடசாலை மாணவியொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நானுஓயா டெஸ்போட்டைச் சேர்ந்த 15 வயது மதிக்கத்தக்க யசோதா என்ற மாணவியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலையிலேயே வீட்டிலிருந்து அவர் காணாமல்போயுள்ளார். அதிகாலை 2 மணியளவில் நித்திரையில் இருந்த மகளை காணவில்லை என தாயார், கணவனிடம் கூறி தேடும் பணியில் ஈடுபட்டனர்.

பின்னர் பொதுமக்களின் ஒத்துழைப்போடு தேடும் பணி தொடர்ந்தது. இந்நிலையில் யசோதாவின் வீட்டிலிருந்து சுமார் 1 கிலோ மீற்றர் தொலைவில் காணப்படும் ஆற்றிலிருந்து அவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்ககப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்

Leave A Reply

Your email address will not be published.