கொழும்பு கால்வாயில் பெண்ணொருவரின் சடலம்

கொழும்பு பகுதியில் உள்ள குப்பை கால்வாயில் இருந்து பெண்ணொருவரின் சடலம் ஒன்றை கண்டெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (29) பிற்பகல் கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்டேஸ்புர பகுதியில் பெண் ஒருவரின் சடலம் இருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அடையாளம் காட்டப்படாத சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் 45 மற்றும் 50 வயதுடைய 4 அடி 09 அங்குல உயரமுடைய பெண் ஆவார்.

மஞ்சள் பூக்கள் கொண்ட சிவப்பு நிற ஆடையை அணிந்திருக்கிறாள்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

Leave A Reply

Your email address will not be published.