குழந்தையை கொடூரமாக தாக்கிய கோழி சமிந்தவை தேடும் போலீசார் (Video)

சமூக ஊடகங்களில் பரவி வரும் சிறு குழந்தையொன்றை தாக்கும் காணொளி தொடர்பில் சம்பந்தப்பட்ட நபரை கைது செய்ய , இரண்டு புலனாய்வு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக வெலிஓயா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குகுல் (கோழி) சமிந்த என அழைக்கப்படும் அவரும் , அவரது மனைவியும் சட்டவிரோத மது பாவனைக்கு அடிமையாகியுள்ளதாக வெலிஓயா பொலிஸார் தெரிவித்தனர்.

குழந்தையின் தாயின் முறைகேடான கணவனால் பிறந்த குழந்தைக்கே குகுல் (கோழி) சமிந்த அடிப்பதாக கூறப்படுகிறது.

மேலும், தற்போதும் கூட இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவர் மற்றும் குகுல் சமிந்த அல்லது பிரதான சந்தேக நபர் சிறு அந்தக் குழந்தையுடன் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

குகுல் சமிந்த தனது மனைவி இருக்கும் போதே, தனது கள்ள மனைவியை வீட்டிற்கு அழைத்து வந்து , மனைவியின் அனுமதியுடன் சகவாழ்வில் ஈடுபட்டதாக வெலிஓயா பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, சம்பவத்தை பதிவு செய்தவர் அதே நபரின் மற்றுமொரு குழந்தையாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.