ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்களுக்கு ஆர்வம் இல்லை! விக்கி கூறுகின்றார்.

ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள மக்களுக்குக் காணப்படும் ஆர்வம் தமிழ் மக்களுக்கு இல்லை என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அத்துடன் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள சகல தரப்பினரதும் கருத்துக்களைப் பெற்றதன் பின்னரே தமிழ்ப் பொது வேட்பாளர் தெரிவு செய்யப்படுவார் என்று விக்னேஸ்வரன் எம்.பி. மேலும் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.