இரண்டு விவாதங்களுக்கும் நான் தயார்.. இதுவே கடைசி முறை..- சஜித்

NPPயுடன் இரண்டு விவாதங்களுக்கும் தயார் என SJBயின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு இறுதியானது என்று கூறிய அவர், இரு விவாதங்களுக்கும் திகதி நிர்ணயம் செய்து பொது இடத்தில் விவாதம் நடத்த வேண்டும் என்றார்.

பொருளாதாரக் குழு விவாதமும் , தலைவர்கள் விவாதமும் என இரண்டு விவாதங்களும் நடத்தப்பட வேண்டும் என்றும், இரண்டிற்கும் ஒன்றாக திகதிகள் தேர்வு செய்யப்பட வேண்டும், ஒன்றில் மட்டும் கலந்து கொள்ள இயலாது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.