ஷானி உள்ளிட்ட மூவருக்கும் ஒக். 16 வரை மறியல் நீடிப்பு!

போலி சாட்சியங்களை உருவாக்கியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர உள்ளிட்ட மூவருக்கும் மீண்டும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

இவர்களை எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இச்சந்தேகநபர்களை இன்று கம்பஹா பிரதான நீதிவான் மஞ்சுள கருணாரத்ன முன்னிலையில் ஆஜர்படுத்தியபோதே, இந்த விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.