கோயில் அர்ச்சகர் இனம் தெரியாவர்களால் வெட்டிக்கொலை.

புங்குடுதீவு கோயில் அர்ச்சகர் இனம் தெரியாவர்களால் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார்.

நேற்று நள்ளிரவு வீடு புகுந்த மர்ம நபர்கள், கோயில் அர்ச்சகரது உதவியாளரை கட்டி வைத்து விட்டு, அர்ச்சகரை வெட்டிக் கொன்றுள்ளனர்.

புங்குடுதீவு ஊரதீவுச்சிவன் கோயில் அர்ச்சகரான கிளிநொச்சியை சேர்ந்த ரூபன் சர்மா (33) என்பவரே வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார்.

புங்குடுதீவில் மாடு வெட்டப்படுவதற்கு எதிராக பூசகர் தொடர்ந்து செயற்பட்டு வந்தார். அவர்கள் தொடர்பான தகவலை வழங்கி வந்தார்.

இந்த கொலையுடன் மாடு வெட்டுபவர்கள் தொடர்புபட்டுள்ளார்களா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது

Leave A Reply

Your email address will not be published.