கொரோனா தொற்றுக்குள்ளான பெண்ணின் மகளுக்கு தொற்றுறுதி.

திவுலப்பிட்டிய பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான பெண்ணின் மகளுக்கு (வயது -16) கொரோனா தொற்றியுள்ளமை பிசிஆர் பரிசோதனைமூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

திவுலப்பிட்டியவை சேர்ந்த 39 வயதான பெண்ணொருவருக்கு கொரோனா தொற்றியுள்ளமை நேற்றிரவு கண்டறியப்பட்டது. இது தொடர்பில் இன்று காலை அனைத்து தரப்புகளுக்கும் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து கம்பஹா மாவட்டத்தில் மினுவங்கொட, திவுலபிட்டிய பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது.

அத்துடன், குறித்த பெண்ணுடன் தொடர்பைபேணிய சுமார் 400 பேர் சுயதனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். பெண்ணின் குடும்ப உறுப்பினர்களுக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இப்பரிசோதனையிலேயே அவரின் மகளுக்கு வைரஸ் தொற்றியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.