நீர்கொழும்புக் கடலில் மூழ்கி 3 இளைஞர்கள் பரிதாபப் பலி.

நீர்கொழும்பு, கொச்சிக்கடை கடலில் நேற்று குளிக்கச் சென்று காணாமல்போன 3 இளைஞர்களும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

மூன்று இளைஞர்களும் மலையகத்தைச் சேர்ந்தவர்களாவர். அவர்களில் இருவர் தலவாக்லை, ஸ்டேலின் தோட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

முத்துகுமார் சிந்துஜன் (வயது 24), மனோகரன் சசிகுமார் (வயது 22) ஆகிய இருவரும் மேற்படி தோட்டத்தைச் சேர்ந்தவர்களாவர்.

மற்றைய இளைஞர் பதுளை, நமுனுகல பகுதியைச் சேர்ந்தவர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இளைஞர்கள் கொழும்பிலுள்ள தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்து கொண்டிருந்த நிலையில் நேற்று மாலை குளிப்பதற்காகத் தமது நண்பர்களுடன் நீர்கொழும்பு நீர்கொழும்பு கடலுக்குச் சென்றுள்ளனர். இந்தநிலையில் திடீரென அலைக்குள் சிக்குண்டு கடலினுள் இழுத்துச் செல்லப்பட்டுக் காணாமல்போயுள்ளனர்.

 

 

 

 

காணாமல்போன மூவரும் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவித்த பொலிஸார், அவர்களின் சடலங்களைத் தேடும் பணிகளைக் கடற்படையினரும் சுழியோடிகளும் முன்னெடுத்து வருகின்றனர் எனவும் குறிப்பிட்டனர்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நீர்கொழும்புப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

 

 

 

 

Leave A Reply

Your email address will not be published.