கோட்டாவின் கட்டளையை மீறுகின்ற அமைச்சர் வாசு.

கோட்டாவின் கட்டளையை
மீறுகின்ற அமைச்சர் வாசு!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் அமைச்சர்களுக்கு வழங்கப்பட்ட பணிப்புரையொன்றை நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மீறுகின்றார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு திங்கட்கிழமையையும் பொதுமக்கள் சேவை தினமாக ஜனாதிபதி அண்மையில் அறிவித்திருந்தார்.

இதற்கு முன் இந்தத் தினம் புதன்கிழமையாக இருந்தது.

இருப்பினும், நாடாளுமன்ற அமர்வுகள் இல்லாத வாரங்களில் புதன்கிழமைகளில் தனது அமைச்சில் பொதுமக்கள் தினம் நடத்தப்படும் என்று அமைச்சர் வாசுதேவ நாணயக்கார் தெரிவித்துள்ளார்.

தனது முகநூலில் அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.