வவுனியாவில் விபச்சாரிகள் என்ற சந்தேகத்தில் ஐவர் கைது.

வவுனியா நகர்ப்பகுதியில் விபச்சார தொழிலில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 5 பெண்களை வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலத்தின் கீழ் செயற்படும் போதைத்தடுப்பு பொலிசார் கைது செய்துள்ளனர்.

இது தொடர்பாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய நகர்ப்பகுதியில் நேற்று காலை 10 மணியளவில் சோதனைகளை மேற்கொண்ட பொலிசார் விபசார தொழிலில் ஈடுபட முயற்சித்த குற்றச்சாட்டில் 5 பெண்களை கைது செய்துள்ளனர்.

குறித்த நபர்கள் குருநாகல், முல்லைத்தீவு, நெடுங்கேணி, விஸ்வமடு ஆகிய பகுதிகளை சேர்ந்த பெண்களே கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் ′இன்றையதினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.