கிளிநொச்சியில் மாணவி ஒருவர் தற்கொலை.

கிளிநொச்சியில் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

அதிகளவான மாத்திரை உட்கொண்ட நிலையில் நேற்றைய தினம் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த மாணவி தருமபுரம் மகாவித்தியாலத்தில் தரம் 10 இல் கல்வி கற்கும் மாணவி என தெரியவந்துள்ளது.

அதிகளவான மாத்திரை உட்கொண்ட நிலையில் அவர் வாந்தி எடுப்பதை அவதானித்த உறவினர்கள் உடனடியாக தருமபுரம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

அங்கிருந்து கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டா்.
பின் யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.