ஊடகவியலாளர்கள் இருவர் மீது சட்டவிரோத மரக்கடத்தல் கும்பல் தாக்குதல்.

முல்லைத்தீவு முறிப்பு பகுதியில் சட்டவிரோதமாக தேக்கு மரங்கள் அறுக்கப்பட்டு இரகசியமாக இடம்பெறும் திருட்டு தொடர்பில் உண்மைத்தன்மையினை வெளிப்படுத்தி செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்கள் இருவர் மீது சட்டவிரோத மரக்கடத்தல் கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது.

இதில், முல்லைத்தீவு மாவட்டத்தின்  ஊடகவியலாளர்கள் ச.தவசீலன் மற்றும் க.குமணன் ஆகியோரே இத் தாக்குதலுக்குள்ளாகினர்.

முறிப்பு பகுதியில் தொடர்சியாக காடழிப்பு மற்றும் தேக்குமரங்கள் சட்டவிரோதமான முறையில் கடத்தப்படுவதாக மக்கள் தெரிவித்துவந்துள்ள நிலையில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்கள் மீதே தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.