சமுர்த்தி உத்தியோகத்தரின் வீட்டில் பட்டப்பகலில் திருட்டு.

சமுர்த்தி உத்தியோகத்தரின்
வீட்டில் பட்டப்பகலில் திருட்டு

– நகைகள், பணம் கொள்ளை

யாழ். இணுவில் – மஞ்சத்தடி பகுதியில் உள்ள சமுர்த்தி உத்தியோகத்தரின் வீடு இன்று பட்டப்பகலில் உடைக்கப்பட்டு நகைகள் மற்றும் பணம்  திருடப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இணுவில் – மஞ்சத்தடி பகுதியில் உள்ள சமுர்த்தி உத்தியோகத்தர் தனது கடமைகளுக்காக இன்று காலை சென்றுள்ளார்.அவ்வாறான நிலையில் வீட்டில் ஒருவரும் இல்லாத வேளையில் பட்டப் பகலில் வீட்டின் கதவை உடைத்து திருடர்கள் நுழைந்துள்ளனர்.

இவ்வாறு உள்நுழைந்த திருடர்கள் வீட்டில் இருந்த தங்க நகைகளையும் பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

குறித்த வீட்டின் கதவு உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த 5 பவுண்  தங்க நகைகளும், 20 ஆயிரம் ரூபா பணமும் கொள்ளையிடப்பட்டுள்ளன என்று கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சம்பவ இடத்துக்குச் சென்ற கோப்பாய் பொலிஸார் குறித்த திருட்டுச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.