பொலநறுவை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவருக்கு கொரணா.

பொலநறுவை பொது வைத்தியசாலையின் 22 ஆவது வார்ட்டில் சிகிச்சை பெற்றுவந்த பெண்ணிற்கு கொரோனா தொற்று இன்று(16) உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து 22 ஆவது வார்ட்டினை தற்காலிகமாக மூட வைத்தியசாலை நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்த பெண் கடந்த 10 ஆம் திகதி உடல்நலக்குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்படதாக கூறப்படுகிறது.

மற்றொரு நோய் காரணமாக அவர் மினுவங்கொடவில் உள்ள ஒரு உள்ளூர் மருந்து சிகிச்சை மையத்திற்கு விஜயம் செய்துள்ளார்.

இந்தப் பெண்ணுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களும், பொலனறுவை பொது வைத்தியசாலை சிகிச்சை வழங்கியவர்களையும் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.