ரிஷாத் பதியுதீனுக்கு அடைக்கலம் கொடுத்ததாக பெண் மருத்துவர் கைது

இன்று காலை காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட எம்.பி. ரிஷாத் பதியுதீனுக்கு அடைக்கலம் கொடுத்ததாக பெண் மருத்துவர் மற்றும் இன்னும் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரிஷாத் பதியுதீன் இன்று காலை தெஹிவலவில் உள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்தபோது போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபரை மறைத்த குற்றச்சாட்டில் வீட்டு உரிமையாளர்களான மருத்துவர் மற்றும் அவரது மனைவி கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், ரிஷாத் பதியுதீன் தெஹிவலவுக்கு வருவதற்கு முன்பு அவர் தங்கியிருந்த இடங்கள் குறித்து சிறப்பு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

பதியுதீனை கைது செய்வதற்கான முடிவை எடுத்ததைத் தொடர்ந்து, அவரோடு தொடர்புகளை பேணிய , எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா, ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட குழுவினரிடமிருந்து காவல்துறையினர் அவரிடமிருந்து தொலைபேசி தொடர்புகளைப் பெற்று வாக்குமூலங்களைப் பெற உள்ளனர்.

ரிஷாத் பதியுதீன் சிஐடி விசாரணைகளுக்குப் பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று போலீஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

2019 ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க புத்தளம் பகுதியில் இடம்பெயர்ந்த மக்களுக்கு போக்குவரத்து வசதிகளை வழங்க இபோச பேருந்துகளைப் பயன்படுத்தி பொது நிதியை மோசடி செய்த குற்றச்சாட்டில் ரிஷாத் பதுர்தீனை கைது செய்யுமாறு சட்டமா அதிபர் 13 ஆம் தேதி போலீசாருக்கு அறிவுறுத்தியிருந்தார். கடந்த ஐந்து நாட்களாக போலீசாரால் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

பொதுமக்களின் பணத்தை தவறான முறையில் பயன்படுத்தல் மற்றும் தேர்தல் சட்ட திட்டங்களை மீறி கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது வாக்களிப்பதற்காக இடம்பெயர்ந்தோரை இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தின் ஊடாக அழைத்து சென்ற குற்றச்சாட்டு தொடர்பில் அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபர் அறிவுறுத்தல் விடுத்திருந்தார்.

அதனடிப்படையில் அவரை கைது செய்யவதற்காக 6 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.