டெல்லியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய பஞ்சாப்.

டெல்லி கேபிடல்ஸ் அணியை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். 2020 கிரிக்கெட் போட்டியின் 38-வது ஆட்டத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணியும், கே.எல்.ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதின.  துபாயில் நடைபெற்ற இந்தப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற டெல்லி அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.

இதன்படி முதலில் துடுப்பாட்டம்
துவக்கிய டெல்லி அணி நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் சேர்த்தது. டெல்லி அணியில் துவக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான்  61 பந்துகளில் 106 ரன்கள் எடுத்தார். இதையடுத்து, 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் துடுப்பாட்டத்தை தொடங்கிய பஞ்சாப் அணி 19 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்து வெற்றியை பதிவு செய்தது.

Leave A Reply

Your email address will not be published.