கைவிடப்பட்ட நிலையில் ஆயுதங்கள் மீட்பு.

கொக்கட்டிச்சோலை களப்பு பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் நேற்று புதன்கிழமை (21) அதிகாலை  விசேட அதிரடிப்படையினரால் ரி 56 துப்பாக்கி 50 ரவைகள் மீட்கப்பட்டு கொக்கட்டிச்சோலை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வவுணதீவு விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கமைய  மட்டக்களப்பு தளபதி உதவி பொலிஸ் அத்தியட்சகர் நளின் பெரேராவின்  ஆலோசனைக்கமைய வவுணதீவு விசேட அதிரடிப்படை பொறுப்பதிகாரி  டபிள்யூ.ஜீ.எஸ்.காயப்பிரிகா தலைமையிலான விசேட அதிரடிப்படையினர் சம்பவதினமான நேற்று புதன்கிழமை (21) அதிகாலையில் குறித்த பகுதியில் உரைப்பை ஒன்றில்  சுற்றப்பட்டு கைவிடப்பட் நிலையில்  ரி.56 ரக துப்பாக்கி ஒன்றும் 2 மகசீன் 50 ரவைகளை மீட்டனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட துப்பாக்கி மற்றும் ரவைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை விசேட அதிரடிப்படையின் மேற்கொண்டுவருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.