ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 07 சிறுவர்களுக்கு கொரோனா

ரிஜ்வே சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 07 சிறுவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

அவர்களுடன் 03 தாய்மார்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதற்கமைய மொத்தமாக 10 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

குறித்த 10 பேரும் பேலியகொட மீன் சந்தையுடன் தொடர்புடையவர்கள் என வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அடையாளம் காணப்பட்ட நோயாளர்கள் IDH வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் சிறுவர்  வைத்தியசாலையின் நடவடிக்கைகள் வழக்கம் போல் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.