பாஜக பிரமுகரான குஷ்பு போலீசாரால் கைது

பாஜக பிரமுகரான குஷ்புவை போலீசார் கைது செய்தனர். விடுதலை சிறுத்தை கட்சி தலைவரான திரு தொல். திருமாவளவனுக்கு எதிரான போராட்டத்தில் பங்கு பெறுவதற்காக சென்ற குஷ்புவை கைது செய்தனர்.

 

மனுஸ்மிருதி நூலில் பெண்களை கொச்சைப்படுத்தும் விதமாக அம்சங்கள் இடம் பெற்றிருப்பதாக கூறி யூடியூப் சேனல் ஒன்றில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திரு தொல்.திருமாவளவன் சமீபத்தில் பேசியிருந்தார்.

 

பெண்களை திருமாவளவன் இழிவு செய்து விட்டார் என்றும், மனுஸ்மிருதியில் அதுபோன்ற எந்த வார்த்தையும் இல்லை என்றும் பாஜக மற்றும் இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

 

மேலும் இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் திருமாவளவன் மீது 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்திருந்தனர். ஈரோட்டில் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்றிருந்த திருமாவளவனுக்கு எதிராக பாஜகவினர் போராட்டம் நடத்தினர்.

இது போன்ற ஒரு சூழ்நிலையில்தான் குஷ்பு தலைமையில் பாஜக மகளிர் அணியினர் திருமாவளவனின் மக்களவை தொகுதியான சிதம்பரத்தில் இன்று தர்ணா போராட்டம் நடத்த முடிவு செய்தனர். இதை எதிர்க்கும் விதமாக நாங்களும் போராட்டம் நடத்துவோம் என்று விடுதலை சிறுத்தை கட்சியினர் அறிவித்திருந்தனர்.

எனவே இருதரப்பு போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்தனர், இருப்பினும் தடையை மீறி போராட்டத்திற்கு சென்ற குஷ்புவை போலீசார் முட்டுக்காடு அருகே கைது செய்தனர்.

 

 

Leave A Reply

Your email address will not be published.