கிளிநொச்சி ஆனையிறவு பகுதியில் விபத்து. தாயும் மகனும் பலி (Update)

கிளிநொச்சி ஆனையிறவு பகுதியில் இன்று இரவு 7-00 மணியளவில் ஆட்டோவும் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான வாகனமும் நேருக்கு நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானதில் தாயும் மகனும் பலி.

ஆட்டோவில் வந்த இருவரும்  படுகாயங்களுக்கு  உள்ளாகி கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் பெயர் விபரம் இதுவரை அறியப்படவில்லை

பிந்திய செய்தி ( update)

 

ஆனையிறவில் கோர விபத்து;
தாயும் மகனும் பரிதாபச் சாவு!

ஆனையிறவுப் பகுதியில் இன்றிரவு இடம்பெற்ற வீதி விபத்தில் கிளிநொச்சியைச் சேர்ந்த தாயும் மகனும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

ஏ – 9 வீதியில் ஆனையிறவுப் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த ஓட்டோவும் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்குச் சொந்தமான எரிபொருள் தாங்கி வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

குறித்த விபத்தில் யாழ்ப்பாணம், நீராவியடிப் பகுதியை சேர்ந்த 58 வயதான இராதாகிருஷ்ணன் மீனாம்பாள் மற்றும் அவரது மகனான 28 வயதுடைய இராதாகிருஷ்ணன் கிருபானந்தன் ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

வித்துக்குள்ளான ஓட்டோவில் பயணித்த தாயும் மகனும் படுகாயமுற்ற நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்ட போதிலும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் தாங்கியைச் செலுத்தி வந்த சாரதி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார்.

விபத்துத் தொடர்பான விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

 

Leave A Reply

Your email address will not be published.