மோட்டார் சைக்கிள் மோதி 91 வயது மூதாட்டி மரணம்!

வீதி விபத்தில் 91 வயதுடைய மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் கம்பஹா – கந்தானை பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியில் பயணித்த ஓட்டோ ஒன்றைக் கடந்து முன்னோக்கிச் செல்ல முயன்றபோது எதிர்த்திசையில் பயணித்த மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் மோதி பின்னர் வீதியில் பயணித்த மூதாட்டி மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் படுகாயமைடைந்த மூதாட்டி ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

கந்தானை பிரதேசத்தைச் சேர்ந்த மூதாட்டியே உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து மோட்டார் சைக்கிளின் செலுத்துனர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கந்தானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.