70 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த பின் 95 வயதில் நடந்த திருமணம்: ராஜஸ்தானில் ஒரு நெகிழ்ச்சி!
இந்திய மாநிலம் ராஜஸ்தானில் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த 95 வயது முதியவர், பாரம்பரிய முறைப்படி தனது துணையை மணந்தார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்ரி பஞ்சாயத்தின் கலந்தர் கிராமத்தைச் சேர்ந்த ராம அங்காரி (95) மற்றும் ஜீவ்லி தேவி (90) ஆகியோர் நடா பராம்பரிய முறைப்படி, ஏழு தசாப்தங்களாக திருமணம் செய்துகொள்ளாமல் நேரடி உறவில் வாழ்ந்து வந்தனர்.
இவர்களுக்கு நான்கு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் என மொத்தம் ஆறு பிள்ளைகள்.
இந்த நிலையில், ராம அங்காரி தனது துணையான ஜீவ்லி 95 வயதில் திருமணம் செய்துகொண்டுள்ளார். சுமார் 70 ஆண்டுகால வாழ்க்கைக்கு பின்னர் இந்த ஜோடி திருமண பந்தத்தில் இணைந்துள்ளது.
இது அவர்களின் வாழ்நாள் பந்தத்தை ஒரு திருமண கொண்டாட்டமாக மாற்றியது. இதில் அனைத்து திருமண சடங்குகளையும் பின்பற்றப்பட்டது.
ஆரவாரத்துடன் நடந்த திருமணம்
அண்டை வீட்டார் மற்றும் சமூக உறுப்பினர்கள் முன்னிலையில் இந்த திருமணம் நடந்தது. ராம அங்காரி, ஜீவ்லியின் திருமணத்தில் அவர்களின் பேரக்குழந்தைகள், உறவினர்கள், மருமகன்கள் மற்றும் மருமகள்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
பாரம்பரிய முறைப்படி சடங்குகள் மற்றும் மிகுந்த ஆரவாரத்துடன் இந்த திருமணம் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் இசை, நடனம் மற்றும் துடிப்பான கிராமக் கூட்டம் இடம்பெற்றன.
மேலும், வயதான தம்பதியினர் புனிதமான திருமண உறுதிமொழிகளை எடுத்துக் கொண்டதால், உள்ளூர்வாசிகள் கொண்டாட்டத்தில் இணைந்தனர்.
