வடக்கு விளையாட்டுத் திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக ஏகாந்தன் நியமனம்.

வடக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் பணிப்பாளராக க.ஏகாந்தனை வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் நியமித்துள்ளார்.

இதற்கான நியமனக் கடிதம் இன்று வெள்ளிக்கிழமை ஆளுநர் செயலகத்தில் வைத்து வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் சிவபாதசுந்தரம் சத்தியசீலனும் கலந்துகொண்டார்.

இவருக்கான நியமனம் நாளைமறுதினம் திங்கட்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வழங்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் பணிப்பாளராகக் கடமையாற்றிய பா.முகுந்தன், மத்திய அரச சேவைக்கு விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு, ஆளுநர் அலுவலக உதவிச் செயலராகக் கடமையாற்றிய க.ஏகாந்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.