மேயர் அதாவுல்லாவின் பங்கேற்புடன் அக்கரைப்பற்றில் ‘கிளீன் ஸ்ரீலங்கா’

அரசின் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் அக்கரைப்பற்று மாநகர சபை எல்லைக்குட்பட்ட கடற்கரை பிரதேசங்கள் துப்பரவு செய்யப்பட்டு அழகுபடுத்தப்பட்டுள்ளன.

கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஐயந்தலால் ரத்னசேகரவின் ஆலோசனையின் பேரில் கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் இஸட்.ஏ.எம். பைசாலின் அறிவுறுத்தலுக்கு அமைவாக அக்கரைப்பற்று மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ் தலைமையில் இந்த வேலைத்திட்டம் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது சுமார் 2.5 கிலோமீற்றர் அளவிலான கடற்கரைப் பகுதிகள் துப்பரவு செய்யப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமாக கடற்கரைப் பிரதேசங்களை பேணிப் பாதுகாப்பது தொடர்பிலான விழிப்புணர்வுக் கலந்துரையாடல் அக்கரைப்பற்று மாநகர மேயர் ஏ.எல்.எம். அதாவுல்லா தலைமையில் இடம்பெற்றது.

இதில் அக்கரைப்பற்று மாநகர ஆணையாளர், பிரதி மேயர் உட்பட உறுப்பினர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் எனப் பலரும் பங்கேற்றிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.