பருத்தித்துறை போலீசாரின் தலையீட்டால் முடிவுக்கு வருகிறது மணல் விநியோக முரண்பாடு

தமது பகுதி வாகனங்களை மணல் விநியோகத்திற்கு இணைத்துக் கொள்ளவில்லை என்பதால் வடமராட்சி கிழக்கு குடத்தனை பகுதி மக்கள் மணல் விநியோக மறியல் போராட்டத்தில் நேற்று முன்தினம் ஈடுபட்டிருந்தனர்.

அன்றைய தினம் காலை 7 மணிக்கு ஆரம்பித்த போராட்டம் 11 30 மணியளவில் நிறைவிற்கு வந்தது.

அன்றைய தினம சம்பவ இடத்திற்கு வருகை தந்த முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் சுகிர்தன் பிரதேச செயலாளருடன் ஏற்படுத்திக்கொண்ட உரையாடலின் அடிப்படையில் இரண்டு நாட்களுக்குள் உரிய தீர்வை தருவதாக தெரிவித்திருந்தால் இதன் அடிப்படையில் அன்றைய தினம் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டிருந்தது.

இந் நிலையில் இன்றைய தினம் மீண்டும்10 மணி அளவில் குடத்தனை பகுதி வாகன உரிமையாளர்கள் மணல் விநியோக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை அறிந்த பருத்தித்துறை போலீசார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து மணல் விநியோகத்தை உரிமம் பெற்று அகழ்வு மற்றும் விநியோக நடவடிக்கைகளில் ஈடுபடும் மணல்காடு கிராம அபிவிருத்தி சங்கத்தினருடன் ஏற்படுத்திக்கொண்ட கலந்துரையாடலில் பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அவர்கள் விடுத்த பணிப்புரைக்கு அமைவாக
இன்றிலிருந்து மணல் விநியோகம் பலம் வழமை போன்று இடம்பெறும் என்று உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மணற்காடு கிராம அபிவிருத்தி சங்க தலைவருடன் உரையாடும்போது முன்பு போன்றே பிரதேச மக்களுடைய வாகனங்களுக்கு முன்னுரிமை கொடுத்து அவர்களது வாகனங்கள் அரைவாசியும். யாழ் மாவட்ட பார ஊர்தி உரிமையாளர் சங்கம் பார ஊர்திகள் அரைவாசியாக வழமைபோன்று இனிமேல் மணல் விநியோக நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்று மணல்காடு கிரம அபிவிருத்தி சங்கத்திற்கு உத்தரவிட்டிருந்ததின் அடிப்படையில் அதனை ஏற்றுக்கொண்ட மணல்காடு கிராம அபிவிருத்திச் சங்கம் இனிவரும் நாட்களில் இடம்பெறுகின்ற மணல் விநியோக நடவடிக்கைகளின் போது முன்னர் எவ்வாறு மணல் விநியோகம் இடம் பெற்றதோ அதே போன்று இடம் பெறவேண்டும் என்று முத்தரப்பும் பூரணமாக ஏற்றுக் கொண்டதன் அடிப்படையில் போராட்டம் இன்றைய தினம் பதினொன்று முப்பது மணியிலிருந்து நிறைவுக்கு வந்துள்ளது.

இதேவேளை சம்பவ இடத்திற்கு காலை ஒன்பது முப்பது மணி அளவில் வருகை தந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன் ஆகியோர், மாவட்ட அரச அதிபர், மாகாண பிரதம செயலாளர், கனிய வளங்கள் மற்றும் புவிச்சரிதவியல் திணைக்களம், ஆகியோருடன் ஏற்படுத்திக்கொண்ட உரையாடலின் பின்னர் பாரவூர்தி சங்கத்தின் மூலம் வடமராட்சி கிழக்கிற்க்கு உட்பட்ட வாகனங்களுக்கும் பார ஊர்தி சங்கத்தின் வாகனமும் சம அளவில் முன்ன மணல் விநியோகத்தை மேற் கொள்ள ஒப்பந்தம் மேற் கொள்வதென்றும் அதறக்காக ஒரு உடன்பாட்டை ஏற்படுத்தி அதன் பின்னர் மணல் விநியோக நடவடிக்கைகளை மேற்கொள்வது என்று தீர்மானிக்கப்பட்டது.

இவ் ஒப்பந்தம் மாகாண பிரதம செயலாளர் மற்றும் மாவட்ட செயலாளர், வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளர், கிராம அபிவிருத்திச் சங்கங்கள், வாகன உரிமையாளர்க,ள் ஆகியோர் முன்னிலையில் கைச்சாத்திடப்பட்டு அதன் அடிப்படையிலேயே தொடரும் நாட்களில் இந்த மணல் விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அதுவரை போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாக அறிவித்திருந்தன.

இதற்குப் பின்னரே பருத்தித்துறை பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து மணக்காடு கிராம அபிவிருத்தி சங்கத்தினர் உடன்ஏற்படுத்திக்கொண்ட உடன்பாட்டின் அடிப்படையிலேயே பிரதேச வாகனங்களையும் பாரவூர்தி உரிமைஉரிமையாளர் சங்கத்தின் வாகனங்கள் அவசியமாக இனிவரும் நாட்களில் மணல் விநியோகம் மேற்கொள்வது என்றும் அதுவரை இந்த இதுவரை அகழ்ந்த மணல் அகழ்வு பத்திரத்தின் அனுமதியை உடனடியாக நிறுத்துமாறு பருத்தித்துறை பொலிஸார் உத்தரவிட்டு சென்றமை குறிப்பிடத்தக்கது.

Comments are closed.