இரு வைத்தியர்கள் மற்றும் ஒரு தாதியருக்கும் கொரோனா தொற்று.

கொழும்பு தெற்கு களுபோவில போதனா வைத்தியசாலையில் பணிபுரியும் இரு வைத்தியர்கள் மற்றும் ஒரு தாதியருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதில் ஒரு வைத்தியர் குழந்தைகள் பிரிவில் பணிபுரியும் மருத்துவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களது குடும்ப உறுப்பினர்கள் வைத்தியசாலை பணியாளர்களுக்கு PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என தெரிவி்க்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.