வவுனியாவில் ஆயுதங்கள் மீட்கப்பட்ட சம்பவம்: வீட்டு உரிமையாளர் உட்பட இருவர் சிக்கினர்!

கொழும்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் வழங்கிய தகவலின் அடிப்படையில் வவுனியாவில் ஆயுதங்கள் மீட்கப்பட்ட சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று வவுனியா மாவட்ட குற்றத் தடுப்புப் பிர்வு பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை கொழும்பில் ஆயுதத்துடன் கைது செய்யப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர் வழங்கிய தகவலின் அடிப்படையில் வவுனியாவில் இரு வீடுகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது, 86 கைக்குண்டுகள், ரி – 56 ரக துப்பாக்கிக்கான ரவைகள், கைத்துப்பாக்கிக்கான மூன்று ரவைகள், 5600 போதை மாத்திரைகள், 10 கிராம் ஐஸ் போதைப்பொருள் என்பன நிலத்தின் கீழ் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டன.

இந்தச் சம்பவம் தொடர்பில் வீட்டு உரிமையாளர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று வவுனியா மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.