முகாமையாளருக்கு கொரோனா தொற்று வங்கி மூடப்பட்டது.

முகாமையாளருக்கு கொரோனா கொமர்ஷியல் வங்கிக்கு பூட்டு

ஹட்டன் நகரிலுள்ள கொமர்ஷியல் வங்கியின் முகாமையாளருக்கு கொரோனா தொற்று உறுதியானத்தையடுத்து வங்கி மூடப்பட்டுள்ளது
கொமர்ஷியல் வங்கியில் கடயாற்றிய முகாமையாளர் கடந்த வாரம் தனது கொழும்பிலுள்ள வீட்டில் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்டபோது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது

கடந்த சில நாட்களாக ஹட்டன் நகரம் சுய தனிமை பிரதேசமாக அறிவித்திருந்த நிலையில் வங்கி மூடப்பட்டிருந்தது இந் நிலையில் சுகாதார அதிகாரிகளின் தகவலுக்கமைய 02/11 இன்று ஹட்டன் டிக்கோயா நகரசபை பொது சுகாதார பரிசோதகரினால் தனிமைப்படுத்தல் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது ,

மேலும் குறித்த வங்கியில் பணிபுரிந்த ஹட்டன், நோர்வூட் மற்றும் கம்பளை பகுதியை சேர்ந்தவர்கள் அவர்களின் வீடுகளில் சுயதனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்

Leave A Reply

Your email address will not be published.