யாழில் 51 பேருக்கு பி.சி.ஆர். சோதனை : எவருக்கும் தொற்று இல்லை

யாழ்ப்பாணத்தில் மேற்கொண்ட 51 பி.சி.ஆர். பரிசோதனைகளில் எவருக்குமே கொரோனா வைரஸ் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொழும்பிலிருந்து வந்த யாழ்ப்பாணம், வேலணை மற்றும் உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளைச் சேர்ந்த 6 பேருக்கு கடந்த சனிக்கிழமை கொரொனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர்களுடன் பஸ்ஸில் பயணித்த 21 பேருக்கு நேற்று மாதிரிகள் பெறப்பட்டு பி.சி.ஆர். பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டன. இவற்றின் பெறுபேறுகள் இன்றிரவு வெளிவந்தன.

அதேவேளை, கடந்த வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் 6 சந்தைகளில் இருந்து பெறப்பட்ட 30 பேரின் மாதிரிகளின் பெறுபேறுகளும் இன்றிரவு கிடைக்கப்பெற்றன. இவற்றில் எவலுக்குமே தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.