“மாகாண சபை முறைமையும் அதிகாரப் பகிர்வும்” எனும் தலைப்பில் யாழ்ப்பாணத்தில் கருத்தரங்கு.

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் ஏற்பாட்டில் மாகாண சபை முறைமையும் அதிகாரப் பகிர்வும் எனும் தலைப்பிலான கருத்தரங்கு இன்று சனிக்கிழமை காலை யாழ்ப்பாணம் ரில்கோ விடுதியில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பல்வேறு தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், உள்ளூராட்சி மன்றப் பிரதிநிதிகள், ஓய்வுநிலை அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டார்கள்.

Leave A Reply

Your email address will not be published.