காற்றாலை மின் கோபுரம் அமைத்தல், கனிய மணல் அகழ்வுக்கு எதிர்ப்பு: மன்னாரில் 7 ஆவது நாளாகவும் தொடர் போராட்டம்.
மன்னாரில் மக்களின் எதிர்ப்பை மீறி இரண்டாவது கட்டமாக முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலை மின் கோபுரம் அமைக்கும் நடவடிக்கை மற்றும் கனிய மணல் அகழ்வு போன்றவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் மன்னார் பஜார் பகுதியில் தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இன்று சனிக்கிழமை 7 ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் வகையில் மன்னார் 








பேசாலை கிராம மக்கள் கலந்துகொண்டார்கள்.
