குமணனை 7 மணிநேரம் இன்று துருவியது ரி.ஐ.டி.

முல்லைத்தீவு ஊடக அமையத்தின் தலைவரும் சுயாதீன ஊடகவியலாளருமான கணபதிப்பிள்ளை குமணன் பயங்கரவாதத் தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்ட நிலையில் இன்று காலை 9.30 மணிக்கு அவர் முல்லைத்தீவு மாவட்டத்தின் அளம்பில் பொலிஸ் நிலையத்தில் உள்ள பயங்கரவாதத் தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவில் விசாரணைக்காகச் சென்றார்.

அவர், சட்டத்தரணி நடராசா காண்டீபனுடன் விசாரணைக்காகச் சென்றார்.

காலை 10 மணியளவில் ஆரம்பித்த விசாரணை சுமார் ஏழு மணித்தியாலங்களாகத் தொடர்ச்சியாக இடம்பெற்றது.

அதன்பின்னர் சட்டத்தரணியுடன் குமணன் அங்கிருந்து வெளியேறினார்.

Leave A Reply

Your email address will not be published.