செம்மணியில் மேலும் 10 எலும்புக்கூடுகள் அடையாளம்!
யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியில் நேற்று சனிக்கிழமை மேலும் 10 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதன் அடிப்படையில் செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை 197 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் 180 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் 38 ஆவது நாளாக நேற்றும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜாவின் முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டன.
………………..
