இராணுவ வாகனம் மோதி இளைஞர் ஒருவர் படுகாயம் – ஆவரங்காலில் சம்பவம்.

யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரின் வாகனம் மோதி இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆவரங்கால் பகுதியில் நேற்று புதன்கிழமை இரவு இராணுவத்தினரின் கன்ரர் ரக வாகனம் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞருடன் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் படுகாயமடைந்த இளைஞரை வீதியில் சென்றவர்கள் மீட்டு, அச்சுவேலி வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

விபத்து தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.