குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் கால்வாயிலிருந்து நேற்று மீட்பு!
குடும்பஸ்தர் ஒருவர் கால்வாயில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மாத்தறை – காலி வீதியில் உள்ள கால்வாயில் இருந்து நேற்று திங்கட்கிழமை அக்குரெஸ்ஸ,பரதுவ திப்பலைவத்த பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்தில் உள்ள மரமொன்றில் இருந்து குடை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்குரெஸ்ஸ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
