மினுவங்கொடை கொத்தணி அறிக்கை வராததால் கடுப்பாகிய சட்டமா அதிபர்!

மினுவாங்கொடை கொரோனா கொத்தணி குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட குழு தொடர்பில் அறிக்கையிடுமாறு சட்டமா அதிபர் அவசர பணிப்புரை விடுத்துள்ளார்.

பதில் பொலிஸ்மா அதிபருக்கு இந்தப் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது எனச் சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மினுவாங்கொடை கொரோனா கொத்தணி உருவான விதம் குறித்து விசாரிக்குமாறு சட்டமா அதிபரினால் பணிப்புரை விடுக்கப்பட்டிருந்தது.

எனினும், அது தொடர்பிலான விசாரணைகள் இதுவரை ஆரம்பிக்கப்படவில்லை. அதனால் கடும் சீற்றமடைந்துள்ள சட்டமா அதிபர் அது தொடர்பில் விளக்கம் கோரியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.