பொன்சேகாவின் கடும் சொற்போர்: பதிலளிக்க மொட்டுக் கட்சி மறுப்பு!

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவிக்கும் கருத்துகளுக்குப் பதிலளிக்க வேண்டியதில்லை. அவர் யாரென்பது மக்களுக்குத் தெரியும்.”

இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

ராஜபக்ஷக்களுக்கு எதிராக சரத் பொன்சேகா தற்போது கடும் சொற்போர் தொடுத்து வருகின்றார். இறுதிப்போரில் நடந்த சம்பவங்களையும் வெளிப்படுத்தி வருகின்றார். வெள்ளைக் கொடி விவகாரம் பற்றியும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

இந்த விவகாரம் தெற்கு அரசியலில் பெரும் அரசியல் சூறாவளியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் சரத் பொன்சேகாவின் அறிவிப்புகள் பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே மொட்டுக் கட்சியின் பொதுச்செயலாளர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.