நுகேகொடை பேரணி அரசுக்கு கடும் அழுத்தமாக அமையும்! – இப்படிக் கூறுகின்றார் நாமல் எம்.பி.

நுகேகொடை அரசியல் சமரானது அரசுக்கு நிச்சயம் கடும் அழுத்தமாக அமையும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ எம்.பி. தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

“நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலேயே நுகேகொடையில் எதிர்வரும் 21 ஆம் திகதி பேரணி இடம்பெறவுள்ளது. இதில் பங்கேற்குமாறு எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த அழைப்பு குறித்து கட்சிகள் எடுக்கும் முடிவை நாம் மதிக்கின்றோம்.

நுகேகொடை பேரணியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பங்கேற்கமாட்டார். எனினும், அவரது ஆசிர்வாதம், ஆதரவு அந்தக் கூட்டத்தக்கு நிச்சயம் இருக்கின்றது. மக்களுக்காகக் களத்தில் இறங்கி போராடிய தலைவர்தான் மஹிந்த ராஜபக்ஷ. அவரின் வழிகாட்டலுடன் எமது பயணம் தொடரும். நுகேகொடை அரசியல் சமரானது அரசுக்கு நிச்சயம் கடும் அழுத்தமாக அமையும்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.