போகம்பர சிறைச்சாலைக்குள்ளும் கொரோனா வைரஸ் தொற்று.

போகம்பர சிறைச்சாலைக்குள்ளும்
நுழைந்துள்ளது கொரோனா வைரஸ். இதுவரை 7 கைதிகளுக்குத் தொற்று.

போகம்பர சிறைச்சாலைக்குள்ளும் கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளது.

இலங்கையில் வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸ் வெலிக்கடைச் சிறைச்சாலையைத் தொடர்ந்து தற்போது போகம்பர சிறைச்சாலைக்குள்ளும் நுழைந்துள்ளதை சிறைச்சாலைகள் ஆணையாளர் இன்று உறுதிப்படுத்தினார்.

அங்கு 7 கைதிகளுக்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக வெலிக்கந்தை ஆதார வைத்தியசாலையில் பலத்த பாதுகாப்புடன் சேர்க்கப்பட்டுள்ளனர் எனவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.