அயல்நாடுகளில் குண்டுகள் வெடித்தாலும் இலங்கைக்கு எந்த ஆபத்தும் இல்லையாம் – இப்படி நாடாளுமன்றில் கூறினார் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்.

இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இரண்டு குண்டுவெடிப்புச் சம்பவங்கள் நடந்திருந்தாலும் அந்தச் சம்பவங்களால் இலங்கைக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

இன்று நாடாளுமன்ற அமர்வின்போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

“நாட்டில் உளவுத்துறை அமைப்புகள் தீவிரமாக இருப்பதால் பாதுகாப்புப் பிரச்சினை இல்லை. இலங்கைக்கு இது போன்ற அச்சுறுத்தல் இருப்பதாக எந்தத் தகவலும் இல்லை. இலங்கையின் உளவுத்துறை தீவிரமாக உள்ளது.

நமது பாதுகாப்புத்துறை, குறிப்பாக ஆயுதப் படைகள் மற்றும் பொலிஸ் பிரிவு, தேசிய பாதுகாப்பில் சிறப்புக் கவனம் செலுத்தி வருகின்றன. எனவே, தேசிய பாதுகாப்பு குறித்து எந்தக் கேள்வியும் இல்லை.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.