டித்வா சூறாவளி பலி எண்ணிக்கை 800 ஐத் தாண்டும்!

இலங்கையில் டித்வா சூறாவளி காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஏறக்குறைய 800 ஐத் தாண்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி 486 பேர் உயிரிழந்துள்ளதுடன், 341 பேர் காணாமல்போயுள்ளனர்.

காணாமல்போனவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மாயமானவர்கள் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ள நிலையில் பலி எண்ணிக்கை 800 ஐத் தாண்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

பேரிடர் மீட்புக் குழுக்கள் பல நாட்களாகத் துண்டிக்கப்பட்ட பகுதிகளில் உடல்களை மீட்டு வருகின்றன. அதேநேரத்தில் தற்காலிக தங்குமிடங்களில் உள்ள குடும்பங்கள் பேரிடரின் போது அடித்துச் செல்லப்பட்ட அன்புக்குரியவர்களின் செய்திக்காக இன்னும் காத்திருக்கின்றனர்.

சில இடங்களில் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கான அணுகல் வழங்கப்பட்டவுடன் அந்த இடங்களை பரிசீலனை செய்யவுள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.