கிராம சேவகர் படுகொலை தொடர்பாக சக பெண் கிராம சேவகரின் கணவர் கைது.

மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தில் பணியாற்றும் கிராம சேவகர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சந்தேகத்தின் பெயரில் சக பெண் கிராம சேவகரின் கணவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலுப்பைக்கடவையில் இருந்து ஆத்திமோட்டை செல்லும் பாதையில் கடந்த 3ஆம் திகதி மாலை 7 மணியளவில் பயணித்த கிராம சேவகர் இனந்தெரியாத நபர் ஒருவரால் அடித்துப் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

இந்தநிலையில், காவல்துறையினரால் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகத்தில் ஒருவர் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் இறந்த கிராம சேவகருடன் கூடப் பணியாற்றும் பெண் கிராம சேவகரின் கணவர் எனவும், இவர்களுக்கிடையில் கொடுக்கல் – வாங்கல் பிரச்சினை இருந்தது எனவும் தெரியவந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.