மல்லாவி பிரதேசத்தில் ஒரு மில்லியன் மரங்களை நடும் கற்பகா மரம் நடுகை திட்டம்.

மரங்களை நடுவோம் சந்ததியை
வளர்ப்போம்.

இன்று மல்லாவி பிரதேசத்தில் ஒரு மில்லியன் மரங்களை நடும் கற்பகா மரம் நடுகை திட்டம் கட்டம் -4 நடைபெற்றது.

மல்லாவி மத்திய விளையாட்டு மைதானத்தில் நிழல் தரும் மரங்களும் மாங்குளம் மல்லாவி வீதியின் இரு மருங்கில் பனை விதைகளும் நாட்டப்பட்டன.

“கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பின்” வழிநடத்தலில் நடைபெறுகின்ற ஒரு மில்லியன் மரங்களை நடுவோம் நிகழ்ச்சித் திட்டத்தல் “மல்லாவி அம்பலவாணர் கற்பகம்அறக்கட்டளையினர்” இன்றைய நிகழ்வை ஒழுங்கு செய்திருந்தனர். திரு KPK . நேசன் நிகழ்வை முன்னின்று நடத்தினார்.

இன்றைய நிகழ்வில் கிளிநொச்சி சமூக அபிவிருத்தி பேரவை (KCDC) உறுப்பினர்கள் கௌரவ பிரதேச சபை மல்லாவி- துணுக்காய் திரு.
அம்பலவாணர் அமிர்தலிங்கம், பாடசாலைகளின் அதிபர்கள், பெரியோர்கள், இளைஞர்கள் பலரும் கலந்து மரங்களை நாட்டி வைத்தனர்.

 

Leave A Reply

Your email address will not be published.