வெலிக்கடைக் கொத்தணி திடீரென 102 ஆக எகிறியது

* 89 பெண் கைதிகள்
* 11 ஆண் கைதிகள்
* சிறை அதிகாரி ஒருவர்
* ஒரு ஊழியர் ஒருவர்

கொழும்பு, வெலிக்கடை சிறைச்சாலையில் மேலும் 72 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த சிறைச்சாலையில் ஏற்கனவே சிறைச்சாலை அதிகாரி ஒருவருக்கும், கைதிகள் 29 பேருக்கும் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அங்கு தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதற்கமைவாக, வெலிக்கடை சிறைச்சாலையில் எழுமாற்றாக மேற்கொண்ட பி.சி.ஆர். பரிசோதனைகளில் 71 கைதிகளும், சிறைச்சாலை ஊழியர் ஒருவரும் கொரோனாத் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதையடுத்து வெலிக்கடை சிறைச்சாலையில் கொரோனாத் தொற்று உறுதியானவர்களது மொத்த எண்ணிக்கை 102 ஆக அதிகரித்துள்ளது. அவர்களுள் 89 பெண் கைதிகளும், 11 ஆண் கைதிகளும், சிறைச்சாலை அதிகாரி ஒருவரும், சிறைச்சாலை ஊழியர் அடங்குகின்றனர்.

தொற்றாளர்களில் 100 கைதிகளும் வெலிக்கந்தை ஆதார வைத்தியசாலையில் பலத்த பாதுகாப்புடன் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார். அதேவேளை, தொற்றுக்குள்ளான சிறை அதிகாரியும் சிறை ஊழியரும் கொழும்பு தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார் எனவும் அவர் மேலும் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.