206 மில்லியன் டொலர் நிதியுதவி இலங்கைக்கு – சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல்.
சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை, இலங்கைக்கு அவசரகால நிதியுதவியை வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.
இதன் மூலம் ‘விரைவான நிதியளிப்பு கருவி’யின் கீழ், சுமார் 206 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை உடனடியாகப் பெற்றுக்கொள்ளும் வசதி இலங்கைக்குக் கிடைத்துள்ளது என்று சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.
