இரத்தக் காயங்களுடன் பெண்ணின் சடலம் மீட்பு!
இரத்தக் காயங்களுடன் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
அனுராதபுரம், மிஹிந்தலை – புதுக்குளம் பகுதியில் நேற்று வியாழக்கிழமை இந்தச் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
புதுக்குளம் பகுதியைச் சேர்ந்த 58 வயதுடைய பெண்ணே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக அனுராதபுரம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மிஹிந்தலை பொலிஸார், இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
