தமிழகத்தில் நாளை முதல் சினிமா திரையரங்குகள் திறக்க அனுமதி.

கொரோனா வைரஸ் பிரச்சினையால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கின் காரணமாக கடந்த 7 மாதத்திற்கு மேலாக தமிழ்நாட்டில் மூடப்பட்டு கிடந்த தியேட்டர்கள் நாளை முதல் (10ந் தேதி) திறக்கப்படுகிறது.

ஆனால் தியேட்டர்களில் படங்களை திரையிடுவதற்கான விபிஎப் கட்டணத்தை இனி தியேட்டர் அதிபர்களே கட்ட வேண்டும். இல்லாவிட்டால் புதிய படங்களை திரையிட மாட்டோம் என்று தயாரிப்பாளர்கள் அறிவித்து விட்டார்கள். இதுகுறித்து நடந்த பல சுற்று பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தது.

இதனால் நாளை தியேட்டர்களில் புதிய படங்கள் எதுவும் வெளிவரவில்லை. கொரோனா ஊரடங்கால் ஓடிக்கொண்டிருந்தபோதே நிறுத்தப்பட்ட படங்களான தாராள பிரபு, ஓ மை கடவுளே, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் ஆகிய படங்கள் மீண்டும் திரையிடப்படுகிறது. இது தவிர அஜீத் நடித்த விஸ்வாசம், விஜய் நடித்த பிகில், தனுஷ் நடித்த அசுரன் படங்கள் மறு திரையீடு செய்யப்படுகிறது

Leave A Reply

Your email address will not be published.